ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்க்குகளை குறிவைத்துள்ள பிரித்தானியா
பிரித்தானிய அரசு, ரஷ்யாவுடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி தளங்கள், வங்கிகள் மற்றும் நிதி நெட்வொர்க்குகளை குறிவைத்து புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக போரை தொடர ரஷ்யாவிற்கு நிதி ஆதாரமாக இருக்கும் இந்த வலையமைப்புகளை முடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"உக்ரைன் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும் பணப்பாதைகளை கண்டறிந்து மூடுகிறோம். ரஷ்யாவின் தாக்குதல்களை ஆதரிப்பவர்களுக்கு தக்க விளைவுகள் ஏற்படும்" என பிரித்தானிய வெளிவிவகாரத் துறை செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இந்த தடைகள், ரஷ்ய அரசின் ஆதரவு பெற்ற A7 நெட்வொர்க் உட்பட பல தளங்களை குறிவைக்கின்றன.
இவை வெளிநாட்டு வங்கி அமைப்புகளை பயன்படுத்தி நிதி பரிமாற்றங்களை மறைமுகமாகச் செய்து, தடைகளை தவிர்க்க உதவியதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த புதிய தடைகள், ரஷ்யாவை மையமாகக் கொண்டு செயல்படும் கிரிப்டோ பரிமாற்ற தளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்களையும் உள்ளடக்கியுள்ளன.
இதன் மூலம் பிரித்தானியா, தனது கூட்டாளிகளுடன் இணைந்து ரஷ்யாவின் போர் நிதி ஆதாரங்களை முறியடிக்க முயற்சிக்கிறது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
கிரிப்டோ நெட்வொர்க்குகள் வழியாக நடைபெறும் பரிமாற்றங்கள், தடைகளை மீறுவதற்கான முக்கிய வழியாகக் கருதப்படுவதால், பிரித்தானிய அவற்றை நேரடியாக குறிவைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UKSanctions #RussiaCrypto #UkraineWar #CryptoBan #A7Network #GlobalPolitics #CryptoNews