பிரித்தானியாவில் துப்பாக்கிச் சூடு: 30 வயது இளம் பெண் உயிரிழப்பு: 3 பேர் கைது
பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் நகரில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அதிகாலை சுமார் 2.45 மணிக்கு வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள One Four one மதுபான விடுதிக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
கைது நடவடிக்கை
இந்த சம்பவத்தை தொடர்ந்து கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 32 வயதுடைய பெண் ஒருவர் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஷெஃபீல்ட் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், வன்முறைக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு உதவி தலைமை காவல்துறை அதிகாரி காலின் மெக்ஃபார்லேன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |