இங்கிலாந்தில் படகு வீட்டில் வெடிவிபத்து: குழந்தை உட்பட 9 பேர் மருத்துவமனையில்
இங்கிலாந்தில், தேம்ஸ் நதிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகு வீடு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
குழந்தை உட்பட 9 பேர் காயம்
இங்கிலாந்திலுள்ள Lechlade என்னுமிடத்தில், தேம்ஸ் நதிக்கரை ஓரமாக படகு வீடு ஒன்று நிறுத்தப்பட்டிருந்திருக்கிறது.
இந்நிலையில், சனிக்கிழமை மதியம் திடீரென அந்த படகு வீடு வெடித்துச் சிதறியது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றும், அந்த படகுவீட்டைக் காப்பாற்ற முடியவில்லை.

ஆயிரக்கணக்கில் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்: வேடிக்கை பார்க்கும் பிரான்ஸ் அதிகாரிகள்
தீப்பற்றி எரிந்த அந்த படகுவீடு முழுமையாக நாசமாகிக் கிடப்பதைக் காட்டும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன.
அந்த படகுவீட்டில் இருந்த ஒரு கைக்குழந்தை உட்பட ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
எதனால் இந்த தீவிபத்து நேர்ந்தது, வெடித்துச் சிதறிய பொருள் என்ன என்பது தெரியாத நிலையில், பொலிசார் இந்த பயங்கர விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |