லொட்டரியில் ரூ.6700 கோடி வென்ற பிரித்தானியர்! மூன்றாவது மிகப்பெரிய வெற்றியாளராக அறிவிப்பு
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 171 மில்லியன் பவுண்டுஸ் ஜாக்பாட்டாய் வென்றுள்ளார்.
இந்த புதிய பிரித்தானிய வெற்றியாளர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் இதுவரை 16 பேர் மட்டுமே £100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஜாக்பாட்டை வென்றுள்ளனர். அவர்களில் இப்போது ஐவரும் ஒருவர்.
அவர் வெற்றிபெற்ற தொகை சரியாக 171,815,297.80 பவுண்டுகள் ஆகும். இதன் இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 6700 கோடிகள் ஆகும்.
EuroMillions பரிசுத் தொகையை வென்ற எண்கள்: 14, 15, 22, 35, 48 மற்றும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்: 03, 08 ஆகும்.
தற்போது இந்த புதிய மல்டி மில்லியனர் குறித்த வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த வெற்றியாளர் இதுவரை ஜாக்பாட் வென்ற பிரித்தானியர்களில் மூன்றாவது பெரிய லொட்டரி வெற்றியாளராகவும், இந்த ஆண்டு மட்டும் ஆறாவது பிரித்தானிய EuroMillions jackpot வெற்றியாளராகவும் மாறியுள்ளார்.
இருப்பதிலேயே அதிகமாக கடந்த ஜூலை 19-ஆம் திகதி ஒரு பிரித்தானியர் 195 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளை வென்று முதலிடத்தில் இருக்கிறார். அனால் அவர் யார் எங்கு வாழ்கிறார் என்பது வெளியிடப்படவே இல்லை.
இரண்டாவது இடத்தில், 184 மில்லியன் பவுண்டுகளுடன் க்ளௌசெஸ்டர்ஷைர் ஜோடியான ஜோ மற்றும் ஜெஸ் இருக்கின்றனர். இவர்கள் கடந்த மே 10-ஆம் திகதி இந்த லொட்டரியை வென்றனர்.
இப்போது, இந்த புதிய பிரித்தானிய வெற்றியாளர் 171 மில்லியன் பவுண்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.