ஏப்ரல் 8 முதல் பிரித்தானிய விசா கட்டணங்கள் உயர்வு
பிரித்தானியாவிற்கு செல்லும் பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்ப விசா விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 8, 2026 முதல் விசா கட்டணங்கள் பெரிதும் உயர்த்தப்பட உள்ளன.
பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சாதாரண 6 மாத பயண விசா 8 பவுண்டு அதிகரித்து 135 பவுண்டுகளாகவும், 2 வருட மல்டிபிள்-என்ட்ரி விசா 31 பவுண்டு உயர்ந்து 506 பவுண்டுகளாகவும் அதிகரிக்கிறது.
10 வருட நீண்டகால விசா 1,128 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
அதேபோல், வேலைவாய்ப்பு விசா கட்டணங்களும் அதிகரிக்கின்றன. Skilled Worker Visa (3 ஆண்டுகள் வரை) £769-லிருந்து £819 ஆக உயர்ந்துள்ளது. Indefinite Leave to Remain (Settlement Visa) £2,064 ஆக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வுகள் காரணமாக, பல நிறுவனங்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 8-க்கு முன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரைந்து வருகின்றனர்.
“பிரித்தானியா ஏற்கனவே G7 நாடுகளில் மிக அதிக செலவான வேலைவாய்ப்பு விசா நாடாக உள்ளது. இது திறமையான வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் திறனை குறைக்கக்கூடும்” என CBI (Confederation of British Industry) எச்சரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு குடியேற்ற அமைப்பிற்கு நிதியளிக்கவும், மொத்த குடியேற்றத்தை குறைக்கவும் உதவும் என அரசு கூறியுள்ளது.
ஆனால் விமர்சகர்கள், இது திறமையான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பிரித்தானியாவிற்கு வருவதில் தடையாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UKVisa #VisaFeeHike #ImmigrationNews #UKTravel #StudentVisa #WorkVisa #BreakingNews