பிரித்தானியாவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை: புலம்பெயர்தல் தொடர்பில் அமைச்சர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில், 10 ஆண்டுகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம் என அமைச்சர்கள் எச்சரித்துள்ளார்கள்.
புலம்பெயர்தல் தொடர்பில் அமைச்சர்கள் எச்சரிக்கை
விடயம் என்னவென்றால், தற்போதைய லிபரல் அரசு, இந்த தண்ணீர் பிரச்சினைக்குக் காரணம் முந்தைய அரசுதான் என்கிறது.
குறிப்பாக, புலம்பெயர்ந்தோர் அதிகமாகிவிட்டதால்தான் தண்ணீர் பற்றாக்குறை என்றும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு தவறியதுதான் அதற்குக் காரணம் என்றும் ஸ்டார்மர் அரசு கூறுகிறது.
பதிலுக்கு, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவரும், நிழல் சுற்றுச்சுழல் அமைச்சருமான விக்டோரியா அட்கின்ஸ் என்பவர், லிபரல் அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியைச் சந்தித்துள்ளதை மூடிமறைக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மொத்தத்தில், 10 ஆண்டுகளில் பிரித்தானியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதிகரித்துள்ள புலம்பெயர்தல்தான் அதற்குக் காரணம் என்றும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |