பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது!
பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் வியாபாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்கிரீம் வியாபாரிக்கு கத்திக்குத்து
செவ்வாய்க்கிழமை மாலை வடமேற்கு லண்டனின் வெம்பிளேயில் 38 வயதுடைய ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கத்தியால் 8 முறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோங்க்ஸ் பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மாலை 6 மணிக்கு பொலிஸார் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கத்திக்குத்து காயங்களால் அவதிக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். மேலும் இது தொடர்பான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இருவர் கைது
இந்த வன்முறை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை கொலை சந்தேகத்தின் பேரில் 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 31 வயதுடைய பெண் கொலை சதி திட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட ஐஸ்கிரீம் வியாபாரி தனது பெரிய டெடி பியர் பொம்மை ஐஸ்கிரீம் வண்டி மூலம் உள்ளூர் மக்களிடையே நன்கு அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |