பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து சிதறி விழுந்த மனிதக் கழிவுகள்! பிரித்தானியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அரிய சம்பவம்
பிரித்தானியாவில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து ஒரு மனிதர் மீதும் அவரது தோட்டத்திலும் மனிதக் கழிவுகள் மழைபோல் விழுந்த ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ராயல் போரோ ஆஃப் வின்ட்சர் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டத்தில், க்ளெவர் ஈஸ்ட் வார்டின் கவுன்சிலர் கரேன் டேவிஸ் (Karen Davies) இந்த சம்பவம் குறித்து பேசியதையடுத்து இந்த அரிய நிகழ்வு வெட்டவெளிச்சமாகியுள்ளது.
லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் முக்கிய விமானப் பாதைகளில் ஒன்றான வின்ட்சர் (Windsor) பகுதியில் தலைக்கு மேல் செல்லும் விமானத்தில் இருந்து மனித கழிவுகள் கீழே விழுந்ததாக குடியிருப்பாளர் கூறியுள்ளார்.
Image: Getty Images
இந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதியில் குறைந்த விமான சேவைகள் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கவுன்சிலர் கரேன் டேவிஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர் மீதும், அவரது தோட்டம் மற்றும் தோட்டத்தில் இருந்த அனைத்து குடைகள் மீதும் முழுவதுமாக மனித கழிவுகள் விழுந்ததாக கூறினார்.
பொதுவாக விமான கழிப்பறைகள் பயணிகளின் கழிவுகளை சிறப்பு தொட்டிகளில் சேமித்து வைக்கின்றன, பிறகு விமானம் தரையிறங்கியவுடன் அவை வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன.
40 ஆண்டுகளாக விமான நிலையங்களில் பணிபுரிந்த விட்ஃபீல்ட் பாரிஷ் கவுன்சிலர் ஜியோஃப் பாக்ஸ்டன் (Geoff Paxton), இந்த சம்பவத்தை 'மிகவும் அரிதானது' என்றும், அவர் நீண்ட காலமாக பார்க்காத சம்பவம் என்றும் கூறினார்.
அந்த நேரத்தில் இது குறித்து, சிவில் ஏவியேஷன் ஆணையத்திடம் (CAA) கேட்கப்பட்டபோது கூறியதாவது: 'விமானத்தில் இருந்து உறைவிக்கப்பட்டிட மனித கழிவுகள் மற்றும் கிருமிநாசினிகள் விழுவது பிரித்தானிய வான்வெளியில் அரிதாக கருதப்படுகிறது மற்றும் இது வானிலை நிகழ்வுகளின் விளைவாக இருக்கலாம். இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய சேதத்திற்கு CAA-க்கு எந்தப் பொறுப்பும் இல்லை" என்று கூறியது.