டோங்கா சுனாமியில் சிக்கி காணாமல் போன பிரித்தானிய பெண்! சோகத்தில் குடும்பத்தினர்
டோங்காவில் சனிக்கிழமை ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பிரித்தானிய பெண் ஒருவர் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.
Angela Glover எனும் 50 வயதாகும் அப்பெண் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் அதிகரித்துள்ளது.
விலங்குகளுக்கான தொண்டு நிறுவனப் பணியாளரான ஏஞ்சலா குளோவர், டோங்காவில் அவரது கடலோர வீடு தாக்கப்பட்டதிலிருந்து காணப்படவில்லை.
அவரது கணவர் ஜேம்ஸ் ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் குளோவர் மற்றும் அவர்களின் நாய்கள் காணாமல் போயின.
பிரித்தானியாவைச் சேர்ந்த க்ளோவர், டோங்காவின் தலைநகரான Nuku’alofa-ல் டாட்டூ பார்லரை இணை நிர்வகித்து வருவதுடன், நாய்கள் மீட்பு மையத்தையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Picture: Facebook / Angela Glover)
நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் தூண்டப்பட்ட சுனாமியால், சாம்பல்கள் போர்வைபோல் டோங்காவை மூடியது.
இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன.
சனிக்கிழமை மாலை வெடித்ததால் இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்ததால், தீவுகளில் உள்ள 105,000 குடியிருப்பாளர்கள் கிட்டத்தட்ட தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால் சேதத்தின் அளவு பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன.
கடலுக்கடியில் உள்ள முக்கிய தகவல் தொடர்பு கேபிள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தீவுகளில் சில பகுதிகளில் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், உள்ளூர் மொபைல் போன்கள் மெதுவாக நெட்வொர்க்குகளுடன் இணைக்கத் தொடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.Picture: Reuters
Picture: Facebook / Angela Glover