500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்
பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது லொட்டரிச் சீட்டிற்கு சுமார் ரூ.500 கோடி பரிசு விழுந்தும், அதிர்ஷ்டத்தை இழக்கவுள்ளார்.
இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த காத் மெயின் (Kath Main) என்ற 46 வயது பெண், தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய 12 மில்லியன் பவுண்ட் (இலங்கை பணமதிப்பில் ரூ.540 கோடி) லொட்டரி பரிசை இழக்கும் நிலையில் உள்ளார்.
காரணம், அவர் வாங்கிய லொட்டரி சீட்டை அந்தக் கடைக்காரர் தவறுதலாக குப்பையில் போட்டுவிட்டார்.
காத், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே ஆறு எண்களில் தொடர்ந்து லொட்டரி சீட்டை வாங்கி வந்தார்.

பொதுவாக அவரது தாயாரே சீட்டை வாங்குவார். ஜூன் 6-ஆம் திகதி நடந்த லொட்டரி டிராவில் பெரிய பரிசு வென்ற சீட்டு இன்னும் பெறப்படவில்லை என்ற செய்தியை பார்த்தபோது தான், காத் தனது எண்கள் வெற்றி பெற்றிருப்பதை உணர்ந்தார். அவர் தாயாரிடம் கேட்டபோது, “சீட்டை சரிபார்த்தேன், வெற்றிபெறவில்லை” என்று கூறியுள்ளார்.
ஆனால் காத், “இல்லை நாம் வாங்கிய சீட்டு வெற்றி பெற்றது, 12 மில்லியன் பவுண்டு” என்று உறுதியாகச் சொன்னார். அதற்கு தாயார், “சீட்டை கடை உரிமையாளர் குப்பையில் போட்டுவிட்டார்” என்று பதிலளித்தார்.
கடை உரிமையாளர் கரண் குமார், “சீட்டை ஸ்கேன் செய்த இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் வெற்றி எண் காட்டப்படவில்லை” என்று கூறியுள்ளார். National Lottery ஆப்பரேட்டரான Allwyn தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
பொதுவாக, லொட்டரி சீட்டை இழந்தாலும், திருடப்பட்டாலும், அழிந்தாலும், உரிய சான்றுகள் இருந்தால் பரிசு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காத், “இந்த 30 நாட்கள் காத்திருப்பு மிகவும் கடினமாக உள்ளது. வெற்றி உறுதி ஆனால், முதலில் நியூசிலாந்து பயணம் செய்து 2029-ல் நடைபெறும் பிரிட்டிஷ் & ஐரிஷ் லயன்ஸ் சுற்றுப்போட்டியை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த அதிர்ஷடம் அவரை வந்து சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |