குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்: காப்பாற்ற பாய்ந்த பெண்
இங்கிலாந்தில், தனியார் உயிரியல் பூங்கா ஒன்றில், நபர் ஒருவர் குழந்தை ஒன்றைத் தூக்கி முதலை இருந்த குழிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்
இங்கிலாந்திலுள்ள Huntingdon என்னுமிடத்தில், ஆன்டி ஜான்சன் என்பவரும் அவரது மனைவியான ட்ரேசி ஜான்சனும் இணைந்து உயிரியல் பூங்கா ஒன்றை நடத்திவருகிறார்கள்.

நேற்று மதியம், சிலர் அந்த உயிரியல் பூங்காவிலிருந்த முதலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, நோர்ஃபோக்கைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர், திடீரென ஒரு 3 வயது குழந்தையைத் தூக்கி முதலைகள் இருந்த குழிக்குள் வீசியுள்ளார். அந்த குழிக்குள் 15 முதலைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மக்கள் பதற, சட்டென உயிரியல் பூங்கா உரிமையாளரின் மனைவியான ட்ரேசி அந்த குழிக்குள் குதித்து குழந்தையைத் தூக்க, இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.
அந்தச் சிறுவனுக்கு கையிலும் இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அதிர்ஷ்டவசமாக, முதலைகள் குழந்தையை ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் பெரிய விடயம்!
இதற்கிடையில், குழந்தையைத் தூக்கி முதலைகளிடம் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் கற்றல் குறைபாடுகள் முதலான பல பிரச்சினைகள் கொண்ட நபர்.
அவரை 24 மணி நேரமும் கவனித்துக்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். அவர் சற்று கவனக்குறைவாக இருந்த நேரத்தில் இந்த நபர் குழந்தையைத் தூக்கி முதலைகளிடம் வீசியுள்ளார்.
அவரை விசாரணைக்குட்படுத்த இயலாத நிலை உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், அவரை ஜாமீனில் விடுவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |