வாட்ஸ் அப்பில் வந்த ஒரு மெசேஜால் பல லட்சங்களை இழந்த பிரித்தானிய பெண்! எச்சரிக்கை செய்தி
வாட்ஸ் அப் மூலம் பிரித்தானியாவை சேர்ந்த பெண் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளது அச்செயலியை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் பவுலா பவுடன். இவருக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸ்அப் வந்துள்ளது. அதில் இது தனது புதிய எண் என்றும், பழைய எண்ணை நீக்கிவிடும்படியும் அவரது மகள் செய்தி அனுப்புவது போலவே மோசடி கும்பல் அனுப்பியுள்ளது.
ஆனால் மகள் ஏதோ ஒரு காரணத்திற்காக எண்ணை மாற்றியுள்ளார் என நினைத்த பவுலா, அந்த எண்ணிற்கு மெசெஜ்களை அனுப்பியுள்ளார். அப்போது தனக்கு மிகவும் அவசர தேவை உள்ளதால் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியுமா? என கேட்டுள்ளனர்.
பவுலாவும் தனது மகள் தான் என நினைத்து சம்மதித்துள்ளார். உடனே பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு, விவரங்கள், ஐஎஃப்எஸ்சி நெம்பர் போன்ற விவரங்கள் பவுலாவின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பவுலாவும் அந்த வங்கி கணக்கிற்கு கேட்ட தொகையை செலுத்தியுள்ளார்.
BBC
அன்று இரவு தனது மகளுக்கு அனுப்பிய ‘குட் நைட்’ மெசெஜ்க்கு பதில் கிடைக்காததால் சந்தேகம் அடைந்துள்ளார். எனவே மகளின் மற்றொரு எண்ணை தொடர்பு கொண்ட போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனே பரிவர்த்தனையை நிறுத்தும் படி பவுலா சம்பந்தப்பட்ட வங்கியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்களால் கடைசி பரிவர்த்தனையை மட்டுமே நிறுத்த முடிந்துள்ளது. இதனால் மோசடி கும்பலின் கைக்கு 16 ஆயிரம் பவுண்ட்கள் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 71,99,747.67) கிடைத்துள்ளன.
இது குறித்து பவுலாவின் மகள் சாம் கூறுகையில், என் தாய் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் கோபம் வந்தது, தனது வயதுடைய மற்ற நபர்களுடன் ஒப்பிடும்போது பவுலா மிகவும் தொழில்நுட்ப ஆர்வலராக இருந்ததாகவும், இருப்பினும் அவர் மோசடியில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
BBC