ரஷ்யாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது உக்ரைன்! தீவிரமடையும் போர்
ரஷ்யாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான தூதரக உறவுகளை உக்ரைன் தற்போது துண்டித்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கிழக்கு பிராந்தியத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்ததைத் தொடர்ந்து உக்ரைன் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் பயங்கர ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ரஷ்யாவுடனான தூதரக உறவுகளை நாங்கள் துண்டித்துவிட்டோம்.
We have severed diplomatic relations with Russia. For all those who have not yet lost their conscience in Russia, it is time to go out and protest against the war with Ukraine.
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 24, 2022
தங்கள் மனசாட்சியை இன்னும் இழக்காத ரஷ்யாவில் உள்ளவர்கள் அனைவரும், உக்ரைனுடனான போருக்கு எதிராக வெளியே சென்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரம் இது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.