ஜேர்மனியை போல் உக்ரைன் இரண்டாக பிரியும்! ரஷ்யாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய உக்ரேனிய உளவுத்துறை
உக்ரைனை இரண்டாக பிரிப்பதே ரஷ்யாவின் திட்டம் என உக்ரேனிய உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்ய, விரைவில் அந்நாட்டு தலைநகர் Kyiv-வை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் Ukrainska Pravda உளவுத்துறை வட்டாரம் ரஷ்யாவின் திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
Kyiv-வை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது, அதற்காக உக்ரைன் எல்லைகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, Kyiv-ல் உள்ள படைகளை அங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர்.
பின் Kyiv-வில் உள்ள விமான நிலையங்களில் ஒன்றை கைப்பற்றி, நகரில் மின்சார இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு இணைப்பை துண்டித்து பீதியை ஏற்படுத்துவார்கள்.
மேலும் பீதியை ஏற்படுத்த தீ வைப்பு மற்றும் கொள்ளையை ஏற்பாடு செய்வார்கள்.
அரசாங்க இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படும். மேலும் பீதியை தூண்ட, Kyiv-வில் இருந்து பெரிய அளவிலான மக்களை வெளியேற்றி, நெடுஞ்சாலைகளை முடக்குவார்கள் மற்றும் உக்ரேனிய துருப்புக்களின் இயக்கத்தைத் தடுப்பார்கள்.
அரசு கட்டிடங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவார்கள்.
பிறகு உக்ரைன் அரசின் தலைமையைக் கைப்பற்றி, பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படும் என அவர்களை அச்சுறுத்தி, ரஷ்ய விதிமுறைகளுக்கு ஏற்ப சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட கட்டாயப்படுத்துவார்கள்.
முடிவில் உக்ரைன், கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி போல, இரண்டு பகுதிகளாக பிரியலாம் என Ukrainska Pravda உளவுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.