ஆபத்தான நபரை பதவிநீக்கம் செய்த ஜெலென்ஸ்கி: மகிழ்ச்சியில் ரஷ்யா
ரஷ்யாவிற்கு ஆபத்தான, உக்ரைனின் இராணுவ தலைமையில் இருந்தவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாதகமான விடயம் என ரஷ்யாவின் இராணுவ ஆய்வாளர் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர்
உக்ரைனின் இராணுவ தலைமை (பாதுகாப்பு அமைச்சர்) பொறுப்பு வகித்தவர் Mykhailo Fedorov.
இவர் அதிகாரத்துவத்தைக் குறைத்து, ரஷ்யாவிற்கு எதிரான ட்ரோன் விமானப் போரை அதிகரித்ததற்காக பாராட்டப்பட்டார்.
ஆனால், 35 வயதாகும் Mykhailo Fedorov பதவியேற்ற ஆறு மாதங்களில், வியாழக்கிழமை அன்று பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ தளவாடங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் கணிசமாக தீவிரப்படுத்தியுள்ள வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிநீக்கத்தை ரஷ்ய இராணுவ வலைப்பதிவர்கள் பாராட்டியுள்ளனர். இது தங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இனி நிலைமை எளிதாகலாம்
ரஷ்ய இராணுவ ஆய்வாளர் அலெக்ஸி ஜிவோவ், "மொத்தத்தில் ஜெலென்ஸ்கி அவரை (Mykhailo Fedorov) இராணுவத் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியது மிகவும் நல்லது... இனி நிலைமை எளிதாகலாம்" என்று பதிவிட்டார்.
அதேபோல் Informant என்ற போர்-ஆதரவு டெலிகிராம் ஊடகம், "ரஷ்யாவிற்கு மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான ஒரு முக்கிய நபரை ஜெலென்ஸ்கி தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியது மிகவும் சாதகமான விடயம் ஆகும்.
குறிப்பாக, அவரது விலகல் என்பது உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகக் கட்டமைப்பிலிருந்து Mykhailo Fedorov-வின் ஆதரவாளர்கள் நீக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது முக்கியமானது" என்று கூறியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |