உலகின் தலை சிறந்த போர் வாகனத்தை உள்ளூர் ட்ரோன் மூலம் நாசம் செய்த உக்ரைன்: மீண்டும் ஒரு வீடியோ
ரஷ்யாவுக்குச் சொந்தமான விலையுயர்ந்த போர் வாகனம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் அதிக செலவின்றி தயாரிக்கப்பட்ட உள்ளூர் ட்ரோன் ஒன்றின் மூலம் தாக்கி அழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உலகின் தலை சிறந்த tankகளில் ஒன்று என கருதப்படும் ரஷ்யாவுக்குச் சொந்தமான T-90 என்னும் போர் வாகனங்களில் ஒன்றை சமீபத்தில் ரஷ்யா உக்ரைனிடம் இழந்தது.
Stary Saltiv என்ற இடத்தில் போரிடும்போது, ரஷ்யாவுக்குச் சொந்தமான 4 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான T-90 tank ஒன்றை, கையில் வைத்து குண்டு வீசும் ராக்கெட் லாஞ்சர் ஒன்றின் உதவியுடன் நாசம் செய்தார்கள் உக்ரைன் வீரர்கள்.
தற்போது, மீண்டும் ஒரு T-90 tankஐ உக்ரைன் வீரர்கள் அழித்துள்ளார்கள். அந்த போர் வாகனத்தின் மதிப்பு 3 மில்லியன் பவுண்டுகள். அந்த T-90 tankஐ உக்ரைன் வீரர்கள் ட்ரோன் மூலம் குண்டு வீசி அழிக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த T-90 tankகள் விலையுயர்ந்தவை, அதிநவீன தொழில் நுட்பம் கொண்டவை. ஆனால், அவற்றை அழிக்க உக்ரைனுக்கு ஆகியுள்ள செலவு மிக மிகக் குறைவாகும்.
சமீபத்தில் தாக்கி அழிக்கப்பட்ட T-90 tankஐ அழிக்க உக்ரைனுக்கு ஆன செலவு வெறும் 400 பவுண்டுகள் மட்டுமே.
அதுவும், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் ஒன்றிலிருந்து வீசப்பட்ட இரண்டு ராக்கெட்கள் அந்த 3 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய T-90 tankஐ வெடித்துச் சிதறவைத்துள்ளன.
ஆக, குறைந்த செலவில் உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவுக்கு பெரும் இழப்பை உருவாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.