உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு
Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் வணிக நிறுவனமான Wildberries மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அமேசான்
இந்த நிறுவனம் 2004-ஆம் ஆண்டு தத்யானா கிம் (Tatyana Kim) என்பவரால் தொடங்கப்பட்டது.
தற்போது ரஷ்யாவின் “அமேசான்” என அழைக்கப்படும் Wildberries, நாட்டின் ஓன்லைன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் பல கிடங்குகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை இழந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிறு வியாபாரிகள் தங்கள் பங்குகளை இழந்ததால், எதிர்கால விற்பனை மற்றும் இழப்பீடு குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது.
உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன், இந்த கிடங்குகள் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவுகின்றன என்று கூறுகிறது. ஆனால் ரஷ்ய அதிகாரிகள், இவை சாதாரண குடிமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகள் என தெரிவித்துள்ளது.
தத்யானா கிம், தாக்குதல்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு உதவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விற்பனை குறைந்து, பல விற்பனையாளர்கள் மாற்று தளங்களை தேடத் தொடங்கியுள்ளனர்.
புதிய யுத்தி
ஆய்வாளர்கள், உக்ரைன் இத்தகைய தாக்குதல்களை ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் புதிய யுத்தத் திட்டமாக பார்க்கின்றனர். இது ரஷ்யாவின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது.
தத்யானா கிம், ரஷ்யாவின் தொழில் வெற்றியின் மிகப்பெரிய அடையாளமாக இருந்தாலும், தற்போது தனது நிறுவனத்தை மீண்டும் எழுப்பி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |