உக்ரைன் நகரம் ஒன்றிலிருந்து ரஷ்யப் படைகளை துரத்தியடித்த உக்ரைன்: புடினுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவு
ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் மீண்டும் மீண்டும் தலைகுனிவை சந்தித்து வருகிறார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமாகிய Kharkivஇலிருந்து ரஷ்யப் படைகள் எல்லையை நோக்கி துரத்தியடிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் தலைநகர் Kyivஐக் கைப்பற்ற இயலாததால், புடின் கண் வைத்த இரண்டாவது முக்கிய இலக்கு Kharkiv ஆகும்.
ஆனால், அந்நகருக்கு வடக்கே ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருந்த கிராமங்கள் பலவற்றை உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றன. எனவே, ரஷ்யப் படைகள் எல்லையை நோக்கிப் பின்வாங்கி வருகின்றன.
உக்ரைன் படைகளோ தற்போது Vovchans'k என்ற இடத்தை நெருங்கிவிட்டன.
ரஷ்யாவின் Belgorod பகுதியிலிருந்து, உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் முகாமிட்டிருக்கும் ரஷ்யப் படைகளுக்கு, உணவுப்பொருட்கள், குண்டுகள் போன்றவை இந்த Vovchans'k வழியாகத்தான் சென்றடையவேண்டும்.
ஆகவே, அந்த முக்கிய பகுதியை உக்ரைன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் நிலையில், ரஷ்யப் படைகளுக்கு, உணவுப்பொருட்கள், குண்டுகள் போன்றவை சென்றடைவதை உக்ரைன் தடுத்துவிட முடியும்.
அப்படி அவை தடுக்கப்பட்டுவிடும் நிலையில், போர் தங்களுக்கு சாதகமாகிவிடும் என உக்ரைன் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.