இந்த போரில் நாம உயிரோடு இருப்போமான்னு தெரியாது... மகளை கட்டிபிடித்து அழுத உக்ரைன் தந்தையின் வீடியோ
என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என உக்ரேனிய தந்தை அழுத நெஞ்சை உருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது நேற்று போர் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா இன்று இரண்டாவது நாளும் அதை தொடர்ந்து நடத்தி வருகின்றது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
⚠️#BREAKING | A father who sent his family to a safe zone bid farewell to his little girl and stayed behind to fight ...
— New News EU (@Newnews_eu) February 24, 2022
#Ukraine #Ukraina #Russia #Putin #WWIII #worldwar3 #UkraineRussie #RussiaUkraineConflict #RussiaInvadedUkraine pic.twitter.com/vHGaCh6Z2i
இந்நிலையில் உக்ரைனில் உள்ள தந்தை - மகள் தொடர்பில் ஒரு உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், தான் இந்த போரில் உயிருடன் இருப்போமோ இல்லையா என்று தெரியாததால் கடைசியாக தனது மகளை கட்டிபிடித்து தேம்பி தேம்பி அழுவது போல உள்ளது.
மேலும் என் மகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என அவர் வேண்டுகோள் விடுக்கிறார். உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.