மாலியில் தாக்குதல்: பிரான்சும், உக்ரைனும் தான் காரணம்! ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு
Russia Accuses Ukraine France Involvement in Mali Attack: மாலி தாக்குதலில் உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
பிரான்ஸ் - உக்ரைனை குற்றஞ்சாட்டிய ரஷ்யா
சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உளவு பிரிவுகள் காரணமாக இருக்கலாம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த கருத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் முதல் ஐரோப்பிய துறையின் இயக்குனர் ஆர்தம் ஸ்டுடென்னிகோவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக RIA நோவொஸ்டி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், விரிந்த சாஹேல் பிராந்தியத்தில் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு பொம்மை அரசாங்கத்தை முன்னெடுக்க பிரான்ஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

அத்துடன் ஜனவரி 3ம் திகதி புர்கினா பாசோவில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையிலும் பிரான்ஸ் பின்னணியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த குற்றச்சாட்டில் உக்ரைன் மற்றும் மற்ற சில ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
அதில், மாலியில் ஆட்சியை கவிழ்க்க உள்ளூர் தீவிரவாதிகளுக்கு உக்ரைன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இராணுவ பயிற்சி வழங்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் மாலியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ரஷ்யாவின் “ஆப்பிரிக்கா கார்ப்ஸ்” படை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |