உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய தூதரகம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக ஐரோப்பிய நாடான போலந்திற்கு மாற்றப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போர் பதற்றமானது அந்த நாட்டின் மேற்கு எல்லை வரை பரவிவிட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை அதன் அண்டைநாடான போலந்திற்கு தற்காலிகமாக மாற்றுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது, ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் உலகளாவிய சூழ்நிலை மதிப்பாய்வு குறித்த ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கூட்டத்தியில், உக்ரைனின் தற்போதைய நிலை மற்றும் அங்கிருந்த இந்திய மாணவர்களை மீட்கும் கங்கா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இந்தியாவின் கடல்வழி, வான்வழி என அனைத்து எல்லை பாதுகாப்பு தயார்நிலை குறித்தும் பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
உக்ரைனிய குடிமக்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: இத்தாலியில் அரங்கேறிய சோகம்!