உக்ரைனிய குடிமக்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: இத்தாலியில் அரங்கேறிய சோகம்!
இத்தாலியில் இருந்து 50 உக்ரைனிய குடிமக்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது தனது போரை தொடங்கியது.
ரஷ்யா அறிவித்த இந்த போரின் விளைவாக உக்ரைனில் உள்ள பெரும்பாலான குடிமக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை நாடுகளான துருக்கி, போலந்து, ருமேனியா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
Vigili del Fuoco/Handout via REUTERS
ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையின் படி இதுவரை உக்ரைனில் இருந்து 2.5 மில்லியன் மக்கள் அகதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறி விட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இத்தாலியின் ஃபோர்லியில் இருந்து 50 உக்ரைனிய குடிமக்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தானது இத்தாலியின் வடகிழக்கு கடற்கரையில் செசெனா மற்றும் ரிமினி இடையே நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது, இதில் பயணித்த 50 உக்ரைனியர்களில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் அங்குள்ள தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய பேருந்து பயணிகளை தொடர்ந்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மையத்தில் ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் கண்டனம்