உக்ரைனின் சிறந்த விமானிகளை இழந்து விட்டோம்! 90% ரஷ்ய வீரர்கள் போர் அனுபவம் பெற்று இருப்பதாக அறிவிப்பு
உக்ரைனுடனான போர் நடவடிக்கையால் 90 சதவிகித ரஷ்ய படையினர் போர் அனுபவம் பெற்று இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் F-16s ரக போர் விமானம்
ரஷ்யாவிற்கு எதிராக போரிட அமெரிக்கா எப் 16 ரக போர் விமானங்களை வழங்க இருக்கும் நிலையில், உக்ரைனிய போர் விமானிகள் ஆறு மாதங்களுக்கும் குறைவான பயிற்சியில் F-16 விமானங்களை பறக்கத் தகுதி பெறுவார்கள் என்று அமெரிக்க மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தின் முழுமையான மதிப்பீட்டு அடிப்படையில், இரண்டு உக்ரைனிய விமானிகள் சமீபத்தில் நாடு திரும்பியுள்ளனர் என உக்ரைனிய விமானப்படையின் தளபதி செர்ஹி ஹோலுப்ட்சோவ் தெரிவித்துள்ளார்.
German Eurofighter Typhoons
2 விமானிகளும் அமெரிக்காவில் மூன்று வாரங்கள் செலவழித்ததாகவும், எஃப் 16-னில் குழுவாக பறக்க அவர்கள் பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முன்னதாக சரியான போர் உபகரணங்கள் இல்லாததே உக்ரைன் தங்களது சிறந்த விமானிகளை ரஷ்யாவிடம் இழந்ததற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
போர் அனுபவம் பெற்ற 90% ரஷ்ய படையினர்
இதற்கிடையில் உக்ரைனில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போது, செயல்பாட்டு தந்திரோபாய மற்றும் ராணுவ விமானத்தின் 90% குழுக்கள், 60% மூலோபாய மற்றும் நீண்ட தூர விமான போக்குவரத்து குழு மற்றும் 85% ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்கியவர்கள் போர் அனுபவத்தைப் பெற்றனர் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.