ரஷ்ய வீரர்களால் உக்ரைனில் உள்ள பெண்களுக்கு நேர்ந்த கொடுமை! அமைச்சர் அதிர்ச்சி குற்றச்சாட்டு
போர் சண்டையின் போது உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் வன்கொடுமை செய்ததாக உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் தொடர்ச்சியாக 10வது நாளாக போர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நகரங்களில் ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.
ஆனால், குலேபா இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
உக்ரேனிய நகரங்களில் ரஷ்ய வீரர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும்போது, சர்வதேச சட்டத்தின் செயல்திறனைப் பற்றி பேசுவது நிச்சயமாக கடினம்.
ஆனால் இறுதியில் இந்த போரை சாத்தியப்படுத்தியவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதிசெய்யும் நாகரிகத்தின் ஒரே கருவி இதுதான் என்று லண்டனில் உள்ள சாதம் ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்வில் குலேபா கூறியுள்ளார்.
ஏற்கனவே இரு நாடுகளும் சண்டையிட்டு வரும் நிலையில் குலேபாவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.