கேன்ஸ் விழாவில் இன்னலுக்கு ஆளான உக்ரேனிய பெண் மொடல்! சட்டப்பூர்வ புகார்
உக்ரேனிய மொடல் அழகி ஒருவர், கேன்ஸ் திரைப்பட விழாவில் பாதுகாவலர்களால் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், உக்ரேனிய மொடல் அழகியான Sawa Pontyjska கடந்த 21ஆம் திகதி கலந்துகொண்டார்.
அப்போது அவர் நிகழ்வில் முற்பட்டபோது, படிக்கட்டுகளின் உச்சியில் காவலாளிகளால் தடுக்கப்பட்டு மோசமான அனுபவத்தை அடைந்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக Pontyjska சட்டப்பூர்வ புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
பிபிசி அறிக்கைகளின்படி, ''நான் அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தேன். நான் கீழே சென்றேன், படிக்கட்டுகளில் ஓட ஆரம்பித்தேன். ஏனென்றால், அது வெளியே திரும்பும் வழி. அப்பெண் என்னை உள்ளே தள்ள முயன்றாள். அதனால் அவள் (காவலாளி பெண்) என்னுடன் என்ன செய்கிறாள் என்று யாரும் பார்க்க முடியாது. பின் கதவு வழியாக என்னை வெளியேற்றினாள்'' என தெரிவித்திருக்கிறார்.
மேலும், ''உடல் தாக்குதல்'' மற்றும் ''உளவியல் சேதம்'' என்று குற்றம்சாட்டி 100,000 யூரோக்களை இழப்பீடாக கோருகிறார்.
இதற்கிடையில் கேன்ஸ் விழா குறித்து Sawa Pontyjska கூறுகையில், ''நான் எப்போதும் கேன்ஸ் திரைப்பட விழாவைப் பெற வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் பிற சர்வதேச நட்சத்திரங்களுடன் சிவப்பு கம்பளத்தில், நான் அனுபவித்த முரட்டுத்தனம் மற்றும் நியாயமற்ற உடல் சக்தியைப் பற்றி நான் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் ஒன்றாகத் தாக்கல் செய்ய தயாராகி வருகிறோம்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |