இந்த அகதிகளில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல மனமில்லையாம்
உக்ரைனிலிருந்து ஜேர்மனிக்கு அகதிகளாக வந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ஜேர்மனியிலேயே தங்கிவிடும் திட்டத்திலிருக்கிறார்களாம்.
அகதிகளில் பாதி பேருக்கு சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமில்லை
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, போரில் இருந்து தப்புவதற்காக ஜேர்மனிக்கு வந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனிய அகதிகளில், 44% பேர் ஜேர்மனியிலேயே நீண்ட காலம் இருக்க விரும்புகிறார்கள்.
இதற்கு முன், 2022 கோடையின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போது, ஜேர்மனியிலேயே தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய உக்ரேனிய அகதிகளின் எண்ணிக்கையைவிட இது 39% அதிகமாகும்.
அகதிகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 18% பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த அகதிகள் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார்கள், குறிப்பாக, மொழிப் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஜேர்மனியிலேயே வாழவேண்டும், வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் மொழிப் பயிற்சி எடுத்துக்கொண்டவர்களில் முக்கால்வாசி பேர் பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |