உக்ரைனின் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 2 பேர் காயம்
உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு அருகில் உள்ள பகுதியில் ரஷ்யா திடீர் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 2வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
இருப்பினும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உறுதியான போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இன்னும் கையெழுத்தாகவில்லை.
ரஷ்யாவும் தொடர்ந்து உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது, உக்ரைனிய வீரர்களும் தொடர்ந்து ரஷ்ய படையின் தாக்குதலை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.
தலைநகர் கீவ் மீது தாக்குதல்
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு அருகில் உள்ள சோலாமியன்ஸ்கி பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஆளில்லா விமானம்(ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் அந்த கட்டிடத்தில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |