ரஷ்ய வீரர்களின் சடலங்களை சேகரித்து வரும் உக்ரைன் வீரர்கள்! காரணம் இதுதான்
ரஷ்ய வீரர்களின் சடலங்களை உக்ரைன் வீரர்கள் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைகளால் சிறை வைக்கப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்காகவே சடலங்களை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி வருகின்றனர்.
ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கார்கீவ் பகுதியை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன் வீரர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் ரஷ்ய வீரர்கள் 60 பேரின் சடலங்களை மீட்டனர். அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள், டி.என்.எ பரிசோதனை மூலம் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் வீரர்களின் சடலங்கள் அல்லது சிறை கைதிகளை பரிமாற்றி கொள்ள இவற்றை சேகரித்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் போர் தொடர்பான மரணங்களைச் சந்தித்ததாகத் தெரியவில்லை என தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் சமீபத்தில் கூட கார்கிவ் நகரின் கிழக்கே உள்ள மாலா ரோஹனில், இரண்டு ரஷ்ய வீரர்களின் உடல்கள் கிணற்றில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டதாகவும், ஒரு சிப்பாய் கைகள் கட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.