போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும் போர் எப்போது முடிவுக்கு வரும்? ஜெலன்ஸ்கி சொன்ன தகவல்
பேச்சுவார்த்தையால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சண்டை கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்குள்ள ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது.
AP
தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சு வார்த்தை மூலம் தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சு வார்த்தைக்குப்பின்னர் தான் போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும்.
இவ்வாறு உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.