கொல்லப்பட்ட100 ரஷ்ய வீரர்கள்...பின்வாங்கும் ரஷ்ய படைகள்: கெர்சனில் போர் தீவிரம்
உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறது.
இந்தநிலையில் தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் இடையே வெள்ளி கிழமை நடந்த சண்டையில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் மற்றும் ஏழு டாங்கிகள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவத்தின் தெற்கு கட்டளை தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக கெர்சன் பிராந்திய கவுன்சிலின் முதல் துணைத் தலைவர் யூரி சோபோலெவ்ஸ்கி டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்த கருத்தில் இது ஆரம்பம் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இனி அனைத்தையும் நீக்க முடியும்...குரூப் அட்மின்களுக்கு வாட்ஸ் அப் வழங்கிய புதிய அப்டேட்!
ஏற்கனவே டினிப்ரோ ஆற்றின் வழியாக கெர்சனுக்கான ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது, இதனால் கிழக்கு மற்றும் கிரிமியா ஆகியவற்றில் இருந்து ரஷ்ய படைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என உக்ரைனின் தெற்கு கட்டளை அறிக்கையில் தெரிவித்துள்ளது.