கிரிமியாவில் ரஷ்ய ஏவுகணைகளை தாக்கி அழித்த உக்ரைன் படை!
உக்ரைனின் கிரிமியாவில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரஷ்ய ஏவுகணை ட்ரோன் மூலம் அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை
உக்ரைன் நாட்டின் மிக முக்கிய நகரமான கிரிமியாவில் ரஷ்ய ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கிரிமியாவின் வடக்குப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பினால் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட ரஷ்ய ஏவுகணைகளை அழித்ததாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
@SASHAKOTS/TWITTER
ரஷ்யாவால் நிறுவப்பட்ட ஜான்கோய் நகரத்தின் ராணுவத் தலைவர், கிரிமியாவின் வடக்குப் பகுதி ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
கிரிமியா ஆக்கிரமிப்பு
உக்ரைன் தான் வெடிகுண்டுகளை ட்ரோன் மூலம் வீசியதாக பகிரங்க அறிவித்துள்ளது. மேலும் "இது ஏவுகணைகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிக்குண்டு தாக்குதல் செய்யவில்லை. மாறாக இது சாதாரண தாக்குதல் தான், ரயிலிலிருந்த ஏவுகணை வெடித்தது எதர்ச்சையாக நடந்துள்ளது.
@AP PHOTO
ரஷ்யாவின் இராணுவ மயமாக்கல் கிரிமியாவின் உக்ரேனிய தீபகற்பத்தை ஆக்கிரமிப்பை நீக்கி திரும்ப செல்ல தயாராகி வருகிறது" என்று உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறியுள்ளது.
இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டதாக கிய்வ் கூறியுள்ளார்.
@ap
ரஷ்யாவின் ராணுவ நிர்வாகி இஹோர் ஐவின், 33 வயதுடைய ஒருவர் கீழே விழுந்த ட்ரோனில் இருந்து காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினார்.
ஏவுகணைகள் சேதப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிடவில்லை. பல கட்டிடங்கள் தீப்பிடித்தது மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தது என ஐவின் ரஷ்ய ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.