ரஷ்யாவிற்கு மரண பதிலடி கொடுத்த உக்ரைன்: பற்றி எரியும் ரஷ்ய ஆயுதக் கிடங்கு
ரஷ்யா உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களில் ரஷ்யாவின் முக்கிய வெடிமருந்துக் கிடங்கை அடித்து நொறுக்கியது உக்ரைன்.
உக்ரைனில் ரஷ்யா படையெடுத்ததை தொடர்ந்து ஒடேசா மற்றும் பிற முக்கிய துறைமுகங்கள் பல மாதங்களாக முற்றுகையிடப்பட்டன. இதனால், உக்ரைனிலிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய 10 பில்லியன் டொலர் மதிப்பினான தானியங்கள் களஞ்சியங்களிலேயே முடங்கின.
இதனால், ஏற்பட்ட உணவு நெருக்கடியால் ஐரோப்பா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உணவு தட்டுப்பாடு அதிகரித்தது.
இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான சுமூக பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை தொடர முடிவு செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று, கருங்கடலில் இருந்து தானிய ஏற்றுமதியை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தானது.
ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட சில மணி நேரங்களில், சனிக்கிழமை காலை தெற்கு உக்ரைனில் உள்ள முக்கிய துறைமுகமான ஒடேசா மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குத்தல் நடத்தியது. உள்ளூர் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது.
Huge smoke, from another angle. pic.twitter.com/jdNbRBebnE
— BlueSauron?️ (@Blue_Sauron) July 23, 2022
இந்நிலையில், ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரத்தில் ஹார்லிவ்காவில் உள்ள ரஷ்யாவின் வெடிமருந்துக் கிடங்கை உக்ரைன் பாதுகாப்புப் படைகள் குண்டு வீசி தகர்த்தனர்.
ரஷ்ய வெடிமருந்து கிடங்கு முழுவதும் வெடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. காளான் வடிவ கரும்புகை விண்ணை எட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.