"ரஷ்ய படைகள் பாக்முட் நகரில் எதையும் சாதிக்கவில்லை” உக்ரைனிய இராணுவ ஆய்வாளர்
உக்ரைனின் பிரதான நகரான பாக்முட்டில் ரஷ்ய படைகள் ஒன்றையும் செய்து சாதிக்கவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெற்றியை தீர்மானிக்கும் நகரம்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாக்முட் நகரை கைப்பற்றுவதன் மூலம் உக்ரைன் நாட்டை எளிதில் கைப்பற்ற முடியுமென ரஷ்ய ராணுவப் படை எண்ணுகிறது.
@afp
அதே சமயம் பாக்முட்டிற்குள்ளே வலுவான அரண் அமைத்து உக்ரைன் படை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
பாக்முட் நகரில் நடைபெறும் சண்டையில் கிட்டதட்ட இரண்டு நாடுகளும் தங்களது ராணுவ ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றன.
@afp
உப்பு சுரங்க நகரமான பாக்முட், உக்ரைனின் கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் ரஷ்யாவால் கிராமடோர்ஸ்க் மற்றும் ஸ்லோவியன்ஸ்க் ஆகிய பெரிய குடியிருப்புகளை ஆக்கிரமிக்க பாக்முட்டை வெல்வது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பாக்முட்டை ஆக்கிரமிக்கவில்லை
"உக்ரேனியப் படைகள் பாக்முட்டில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உறுதிப்படுத்தியுள்ளன . ரஷ்யப் படைகளால் பாக்முட்டில் எதுவும் செய்ய முடியவில்லை" என்று உக்ரைனிய இராணுவ ஆய்வாளர் ஓலே ஜ்தானோவ் YouTube விளக்கக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
@afp
"அவர்கள் நகரின் வடக்கு அல்லது தெற்கே இரண்டு நூறு மீட்டர்கள் முன்னேறியிருக்கலாம், ஆனால் உண்மையில் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை.
இன்று அதிகாலை அறிக்கையில், உக்ரைன் இராணுவத்தின் ஜெனரல் ஸ்டாஃப், பக்முட் பகுதியில் "பல எதிரிகளின் தாக்குதல்களை" முறியடித்ததாக கூறியுள்ளார்.
ஆனால் ரஷ்யப் படைகள் "பெரிய உயிரிழப்புகளைச் சந்தித்து வருகின்றன, கணிசமான அளவு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இழந்துவிட்டன" என தெரிய வந்துள்ளது.