"உலகளவில் இரண்டாவது மோசமான போர்" உக்ரைனில் 75,000 பேரை இழந்த ரஷ்யா!
உக்ரைன் போரில் ரஷ்யா 75,000-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
உக்ரைன் போரில் ரஷ்யா 75,000 வீரர்களை இழந்துள்ளது, அவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களின்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்ட புடினின் ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கை ஆரம்பத்திலேயே பாதியளவு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தன்னை ரஷ்ய அதிகாரிகள் 'புரளி' என்று நிராகரித்தனர்.
உக்ரைன் மீதான இரத்தக்களரியான போரில் ஆரம்ப நாட்களைத் தவிர, கடந்த சில மாதங்களில் ரஷ்யா அதன் இறப்பு விகிதங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. உக்ரைனில் நடந்த இராணுவ நடவடிக்கையில் 1,351 வீரர்கள் கொல்லப்பட்டதாக மார்ச் மாதம் ரஷ்யா கூறியது.
இந்நிலையில், 5 மாதங்களைக் கடந்து நடைபெற்றுவரும் போரில் ரஷ்ய தரப்பில் சுமார் 75,000 பேரை இஅழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அடங்கும் என கூறப்படுகிறது.
இந்த புதிய வகைப்படுத்தப்பட்ட உயிரிழப்பு விகிதங்கள் உண்மையாக இருந்தால், உக்ரைன் போர் "இரண்டாம் இழப்புகளின் அடிப்படையில் மிக மோசமான போர்" என்றும் "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளவில் இரண்டாவது மோசமான போர்" என்றும் கூறப்படுகிறது.
மேலும், அந்த அறிக்கையில் 350,000 அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்ட வியட்நாம் போர் மட்டுமே மிகப்பெரியது என்றும் கூறியது. 80-களின் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தான் போரில் முன்னாள் சோவியத் யூனியன் ஏறக்குறைய 70,000 பேர் உயிரிழந்ததாக அறிக்கை கூறுகிறது.
ரஷ்யா தனது படைகளை கிழக்கு பிராந்தியத்தில் குவிக்க முடிவு செய்தது, போரின் தொடக்கத்தில் உக்ரேனியர்கள் கடுமையான பாதுகாப்பை அமைத்ததால் அதன் படைகள் தலைநகர் கீவை கைப்பற்றத் தவறியது.
எவ்வாறாயினும், இறப்பு விகிதங்கள் மிகவும் ஊகமாக இருப்பதாக அறிக்கை மேலும் கூறியது.
ஒரு நாளைக்கு 100 முதல் 200 துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கடந்த மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.