நான்காம் ஆண்டை நெருங்கும் உக்ரைன் போர்: உலக நாடுகளிடம் ஜெலென்ஸ்கி வைத்துள்ள வேண்டுகோள்!
உக்ரைன் போர் நான்காம் ஆண்டை நெருங்கும் நிலையில், உலக நாடுகள் மேலும் அழுத்தம் கொடுக்க உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் இழுபறி
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போர், இரு தரப்பிலும் பெரும் அழிவையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பலமுறை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், ரஷ்யா போரை நிறுத்த சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆரம்பகட்ட அழுத்தத்தின் காரணமாக, ரஷ்யா உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.
ஆனால், இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.
ரஷ்யா தாக்குதல்
இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், ரஷ்யா தனது ராணுவ தாக்குதலைத் தொடர்ந்தது. அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது, இதில் 28 பேர் உயிரிழந்தனர் மற்றும் 142 பேர் காயமடைந்தனர்.
இந்த சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அடைய ரஷ்யா மீது சர்வதேச சமூகம் மேலும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தனது வேண்டுகோளை தீவிரப்படுத்தியுள்ளார்.
"இந்தத் தாக்குதல், ரஷ்யா போர் நிறுத்தத்தை நிராகரித்து, கொலையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது," என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
மேலும், போரின் உண்மையான விலையை ரஷ்யா உணர அழுத்தம் கொடுக்கத் தயாராக இருக்கும் நட்பு நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |