என் மகனுக்கும் உன் வயது தான்! உக்ரைனில் 41 வயதான பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. சுட்டு கொல்லுங்கள் என ஆவேசம்
உக்ரைனில் உள்ள கிராமத்தில் 41 வயதான பெண்ணிற்கு 19 வயது உக்ரைன் வீரரால் நேர்ந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ப்ரோவெரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை ரஷ்ய படைகள் கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி தங்கள் கட்டுபாடுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு வசிக்கும் தஷா மற்றும் நிகா ஆகியோருக்கு நடந்த கொடூரம் குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி தஷா வீட்டிற்குள் ரஷ்ய வீரர்கள் சில புகுந்தனர். பின்னர் அவரை வெளியில் இழுத்து போட்டு வந்து அருகே இருந்த நிகா வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது தஷாவின் கணவர் ரஷ்ய வீரர்களிடம் சென்று பேச முயன்ற போது அவரை சுட்டு கொன்றுள்ளனர்.
பின்னர் இரண்டு பெண்களையும் சீரழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நிகா கூறுகையில், அதில் ஒரு ரஷ்ய வீரரிடம் உன் வயது என்ன என கேட்டேன். தன்யா என்ற பெயர் கொண்ட அவன் தனது வயது 19 என்றான், உடனே நான் என் வயது 41 ஆகிறது.
என் மகனுக்கும் உன் வயது தான் ஆகிறது என்றேன். மேலும் ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறாய் என கேட்டதற்கு, இரண்டு வாரங்களுக்கு மேலாக பெண்களையே நான் பார்க்கவில்லை என கூறினான்.
என்னை சீரழித்தவர்கள் நீதிபதிகள் முன்னால் நிற்க வைக்கப்பட வேண்டும். அவர்கள் தான் குற்றவாளிகளுக்கான தண்டனையை தெரிவிக்க வேண்டும். அவர்களை சுட்டு கொல்லுங்கள் அல்லது கிழித்தெறிந்து கொல்லுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.