போட்டிக்கு 1 மணிநேரத்திற்குள் வெளியேற்றப்பட்ட உக்ரேனிய வீரர்! காரணம் தலைக்கவசம்..ஏன்?
தலைக்கவசத்தை மாற்ற மறுத்த உக்ரேனிய வீரருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
உக்ரேனிய ஸ்கெல்டன் பந்தய வீரர்
இத்தாலியின் மிலன் மற்றும் கோர்டினாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் கலந்துகொள்ளவிருந்த உக்ரேனிய ஸ்கெல்டன் பந்தய வீரர் Vladyslav Heraskevych, போட்டிக்கு ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பே வெளியேற்றப்பட்டார்.
அதற்கு காரணம் அவர் பயன்படுத்த வைத்திருந்த தலைக்கவசம்தான். ரஷ்ய படையெடுப்பில் பாதிக்கப்பட்டவர்களை சித்தரிக்கும் தலைக்கவசத்தை அவர் மாற்ற மறுத்ததால், ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கோர்டினாவில் தீவிர பதக்கப் போட்டியாளரான அவரை, அரசியல் தொடர்பான காரணம் காட்டி வெளியேற்றியதற்காக, சர்வதேச ஒலிம்பிக் குழு இப்போது கடுமையான பின்னடைவை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |