பாலியல் அடிமைகளாக கடத்தப்படும் உக்ரேனிய பெண்கள், சிறார்கள்: எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் பாலியல் அடிமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தப்படுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா மிருகத்தனமான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், அகதிகளாக வெளியேறியுள்ள மக்கள் பாலியல் அடிமைகளாக கடத்தப்படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலந்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் சிக்கியுள்ள உக்ரேனிய மக்களை அப்படியான கும்பல் குறிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty images
ஆனால், ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்ட பெரும்பாலான மக்கள் தான் பெருமளவில் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே, ஐந்து மாதங்களுக்கு முன்னர் நடந்த படையெடுப்பில் இருந்து சுமார் 200,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரேனில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ள பெண்கள் மற்றும் சிறார்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவில் இருந்து வெளியான ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது.
மேலும், உக்ரைன் மீதான போரால் பல ரஷ்ய செல்வந்தர்கள் அரபு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அவர்களுக்கு ரஷ்ய மொழி பேசும் ஊழியர்கள் மற்றும் பணியாட்கள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@getty images
போர் தொடங்கிய முதல் பத்து நாட்களில் உக்ரைனில் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும், துபாய் மாகாணத்தில் சிக்கும் அகதிகள் பெரும்பாலானோர் பாலியல் தொழிலுக்கும் கொத்தடிமைகளாகவும் பயன்படுத்தப்படுவதாக புதிய ஆய்வறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.