உக்ரேனிய இளைஞரை ரஷ்யாவிற்கு நாடுகடத்திய கஜகஸ்தான்: தேச துரோக குற்றச்சாட்டு..என்ன நடந்தது?
உக்ரைனுக்கு நிதி மாற்றிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாக மீறல் வழக்குகளுக்காக கைது
அலெக்ஸாண்டர் கச்குர்கின் (25) என்ற உக்ரேனிய குடிமகன் கிரிமியாவில் வளர்ந்தவர் ஆவார்.
பின்னர் Perviy Otdelயின்படி, 2014யில் மாஸ்கோ அந்த தீபகற்பத்தை இணைத்த பிறகு, அவருக்கு ரஷ்ய குடியுரிமை "வலுக்கட்டாயமாக" வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் அவர் அரசியல் காரணங்களுக்காக கஜகஸ்தானின் Almatyயில் வசித்து வந்தார்.
ஜனவரி 28ஆம் திகதி, அலெக்ஸாண்டர் தவறான இடத்தில் சாலையைக் கடந்ததாகவும், வீட்டிற்குள் ஹுக்கா புகைத்ததாகவும் கூறி நிர்வாக மீறல் வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்குகள் புனையப்பட்டவை என்று Perviy Otdel கூறியுள்ளது.
ரஷ்யாவிற்கு நாடு கடத்தல்
மேலும், கஜகஸ்தான் அதிகாரிகள் அவரை ரஷ்யாவிற்கு நாடு கடத்தியுள்ளனர். அங்கு அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, உக்ரைனுக்கு பணம் மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டார் என ரஷ்ய மனித உரிமை அமைப்பான Perviy Otdel தெரிவித்துள்ளது.

அவர் ரஷ்யாவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் உக்ரைனுக்கு நிதி மாற்றியதாகக் கூறப்படும் தேச துரோகக் குற்றச்சாட்டுக்களின் பேரில், மாஸ்கோவின் பாஸ்மன்னி மாவட்ட நீதிமன்றத்தால் அவர் விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்கு 12 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |