தமிழன் நடராஜன் போல நெட் பவுலராக தொடங்கி ஐபிஎல்லில் சூறாவளி பந்துவீச்சால் மிரட்டும் இளம்வீரர்! எவ்வளவு வேகம் தெரியுமா?
ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக உதயமாகியிருக்கும் உம்ரன் மாலிக், நடராஜன் போலவே நெட் பவுலராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இன்று பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உம்ரன் மாலிக் குஜ்ஜார் நகரில் ஷீதி சவுக் பகுதியில் பழங்கள், காய்கனிகள் விற்பவர். 10ம் வகுப்புப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர், ஆனால் இவரை கிரிக்கெட் வீரராக உருவாக்குவதில் இவரது குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு, குடும்பம் சாதாரணப்பட்ட குடும்பம்தான்.
அண்டர்-19 அணியில் 2018-ல் சேர்ந்தார். வேகம் அதிகம், ஆனால் லைன் அண்ட் லெந்த் இல்லை. ரஞ்சி டிராபி அணியில் பெஞ்சில்தான் இருந்தார், நெட் பவுலிங் தான் இவரது பணி. 2019-ம் ஆண்டு வேகப்பந்து தொழிற்சாலையான எம்.ஆர்.எஃப் இவரை அழைக்க இவரது கிரிக்கெட் வாழ்வே மாறிப்போனது. இர்பான் பதான் இவரது பந்து வீச்சை சரி செய்தார்.
ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஒரேயொரு டி20 போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளை ரயில்வேஸ் அணிக்கு எதிராக எடுத்தார். பெரிய டேலண்ட் என்பது தெரியவந்தது. இப்போது கேன் வில்லியம்சன் அவருக்கு ஆதரவு அளிக்க நெட் பவுலர் தரத்திலிருந்து அணியின் முன்னிலை பவுலராக 2 போட்டிகளிலேயே தன்னை நிரூபித்தார் உம்ரன் மாலிக் , நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர் 21 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
தன் முதல் போட்டியிலேயே 151.75 கிமீ வேகம் வீசி ஐபிஎல் 2021 சாதனை புரிந்த உம்ரன் மாலிக் நேற்று மனிக்கு 153 கிமீ வேகம் வீசி பின்னி பெடலெடுத்தார்.
இவரது பவுலிங் குறித்து கேன் வில்லியம்சன் நேற்றைய ஆட்டம் முடிந்து கூறுகையில், நிச்சயமாக உம்ரன் மாலிக் ஒரு சிறப்புதான். இரண்டு சீசன்கள் அவரை நெட் பவுலராக வீசச்சொல்லி கணித்தோம். அவருக்கு சிறப்பான வாய்ப்பு அமைந்தது, அவர் வந்து இப்படி சிறப்பாக வீசுவது அருமை. அணிக்கு மதிப்பு மிக்க ஒரு சேர்க்கைதான் உம்ரன் மாலிக் என கூறியுள்ளார்.