பாகிஸ்தானுக்கு பாரிய நிதி உதவி தேவை: வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஐ நா பொது செயலாளர் கருத்து
பாகிஸ்தான் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.
பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நிதியுதவி தேவை என்றும் வலியுறுத்தல்.
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் சனிக்கிழமை பார்வையிட்டார்.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த பருவமழை மற்றும் வடக்கு மலைப்பகுதியில் பனிப்பாறை உருகியது போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பல மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
Pakistan and other developing countries are paying a horrific price for the intransigence of big emitters that continue to bet on fossil fuels.
— António Guterres (@antonioguterres) September 10, 2022
From Islamabad, I am issuing a global appeal:
Stop the madness.
Invest in renewable energy now.
End the war with nature. pic.twitter.com/P0jtVikv1r
இதில் 1,391 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் வீடுகள், சாலைகள், ரயில் பாதைகள், பாலங்கள், கால்நடைகள் மற்றும் பயிர்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மேலும் நாட்டில் நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கிட்டத்தட்ட 33 மில்லியன் மக்களின் வாழ்க்கை சீர்குலைந்ததுடன், நாட்டின் வெள்ள சேதம் $30 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானை பார்வையிடுவதற்காக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சனிக்கிழமையன்று சிந்து மாகாணத்திற்கு வந்தடைந்தார்.
PM Shehbaz Sharif & United Nations Secretary General Antonio Guterres having an aerial view of the flood affected areas on their way from Sukkur to Usta Muhammad.
— Prime Minister's Office (@PakPMO) September 10, 2022
UNSG declared the destruction caused by floods as "unimaginable".#UNSGinPak#UNSGSolidarityVisit#SolidarityVisit pic.twitter.com/4HC252KKRw
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் வெளியிட்ட காணொளியில், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அருகில் குட்டெரெஸ் அமர்ந்து வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை விமானம் மூலம் பார்வையிடுவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசுகையில், சோகத்தைப் பற்றிய இவ்வளவு விரிவான விளக்கங்களைக் கேட்கும்போது ஆழமாக உணர்ச்சிவசப்படாமல் இருப்பது கடினம், மேலும் "பாகிஸ்தானுக்கு பாரிய நிதி உதவி தேவை. இது தாராள மனப்பான்மை அல்ல, நீதிக்கான விஷயம்." என தெரிவித்தார்.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: மன்னராக முறைப்படி அறிவிக்கப்பட்டார் மூன்றாம் சார்லஸ்: நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
அத்துடன் மனிதகுலம் இயற்கையின் மீது போர் தொடுத்து வருகிறது, இயற்கை மீண்டும் தாக்குகிறது, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.