ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தலிபான்களுக்கு ஆதரவாக வாக்களித்த 5 நாடுகள்!
ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் தலிபான்களின் கீழ் மனித உரிமைகளை கண்காணிக்க ஒரு சிறப்பு அறிக்கையாளர் மற்றும் நிபுணர் குழுவை நிறுவ தீர்மானம் நிறைவேற்றியது.
ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் கவுன்சில், ஐரோப்பிய யூனியன் தலைமையிலான 50 முக்கிய ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
அதாவது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை கண்காணிக்க ஒரு சிறப்பு அறிக்கையாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.
47 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தில் தீர்மானத்திற்கு ஆதரவாக 28 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்களிக்கவில்லை.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வெனிசுலா மற்றும் எரித்ரியா உள்ளிட்ட ஐந்து நாடுகள், ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளரை நியமிப்பதற்கு எதிராக வாக்களித்தன.
ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகள் ஆதவாக வாக்களித்தன.