தாலிபான்கள் கையில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு ரூ 400 கோடி வழங்கப்படும்! யார் அறிவித்துள்ளார்கள் தெரியுமா?
ஆப்கானிஸ்தானுக்கு 20 மில்லியன் டொலர்களை ஐ.நா வழங்கவுள்ளது.
ஆப்கானிஸ்தானில் போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவே ஐ.நா.வின் மத்திய அவசரகால உதவி நிதியிலிருந்து 20 மில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 400 கோடி) வழங்கப்படவுள்ளது.
மேலும், அந்நாட்டுக்கு நிகழாண்டு மட்டும் 606 மில்லியன் தேவை எனவும், அதை வழங்க உலக நாடுகள் உதவ வேண்டும் எனவும் ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் தலைமையில் நடைபெற்ற உயா்நிலை நன்கொடையாளா்கள் மாநாட்டில் இந்த வேண்டுகோளானது முன் வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக பஞ்சம் மற்றும் வன்முறையை எதிா்கொண்டுள்ள மக்களை அண்மைக்கால நடவடிக்கைகள் மேலும் பாதிப்படையச் செய்துள்ளன. கடுமையான வறட்சியால் வரவிருக்கும் அறுவடையையும் பாதிக்கும் சூழல் உள்ளது.
இந்த மாநாட்டில் திரட்டப்படும் நிதியின் பெரும் பங்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.