கெர்சனில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை அறை! அதிர்ந்த உக்ரேனிய புலனாய்வாளர்கள்
புடினின் ஆதரவாளர்கள் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாளிகள் என்று கூறுவதற்கான சமீபத்திய ஆதாரமாக கெர்சனில் சித்திரவதை அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
எங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதியை விடுவிக்கும்போது, சித்திரவதை அறைகள் மற்றும் இறந்த உடல்களை காண்கிறோம் - உக்ரேனிய வெளியுறவு அமைச்சர்
உக்ரேனிய புலனாய்வாளர்கள் கெர்சனில் ஒரு பாதாள அறையில் உடைந்த மூன்று எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்.
ரஷ்ய துருப்புகளிடம் இருந்து Mykolaiv, கெர்சன் கைப்பற்றப்பட்ட பிறகு, உக்ரேனிய வீரர்கள் ஒரு சித்திரவதை அறையை கண்டுபிடித்தனர்.
புடினின் ஆதரவாளர்கள் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாளிகள் என்று கூறுவதற்கான சமீபத்திய ஆதாரம் இது என்று கூறப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளும், ரஷ்ய ஆக்கிரமிப்பின் போது கெர்சன் பகுதியில் வசித்த பொதுமக்களுடையது என்று உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 'ரஷ்ய ராணுவத்திடம் இருந்து ஒவ்வொரு முறையும் எங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதியை விடுவிக்கும்போது, சித்திரவதை அறைகள் மற்றும் வெகுசன புதைகுழிகள், ரஷ்ய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடல்கள் இருப்பதைக் காண்கிறோம்' என உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இப்படிப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதல்ல. ஆனால், ஒவ்வொரு போரும் அரசியல் தந்திரத்துடன் தான் முடிகிறது என்றும், ரஷ்யா நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையை அணுக வேண்டும் என்றும் நான் கூறினேன்' எனவும் தெரிவித்தார்.