சென்னை அருகே கிரிக்கெட் மைதானத்தில் வெடிக்காத ஏவுகணை கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்
சென்னையின் புறநகரில் உள்ள பெரியபாளையத்தில் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது இளைஞர்கள் வெடிக்காத ஏவுகணையை கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 7-ஆம் திகதி எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகில் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஸ்டம்புகளை நடுவதற்கு சில இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.
அப்போது தரையில் ஸ்டம்பை அடிக்கும்போது அங்கு இரும்பு போன்ற மிக கனமான பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவர்கள் ஆரம்பத்தில் அந்த பொருளை தங்கள் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கத் தொடங்கினர். பின்னர் அது என்னவாக இருக்கும் என தோண்டி பார்த்தபோது அந்த வெடிக்காத ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டது.
பீதியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த ஏவுகணை வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில், காவல்துறை வெடிகுண்டு அணிக்கு தகவல் கொடுத்தது.
பரிசோதனையில், அந்த வெடிகுண்டு ஒரு அடி நீளமும் 8 கிலோ எடையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஷெல் சுடப்பட்டபோது எறிபொருள் வெடிக்காமல் இருக்கலாம் என்றும், இருப்பினும் அதை சரியாக கையாளப்படாவிட்டால் இப்போது கூட வெடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த எறிபொருளை ஆய்வு செய்து பின்னர் அழிக்க நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.