தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு அறிமுகம்! பிரபல ஐரோப்பிய நாடு முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான இத்தாலி, தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்றழைக்கப்படும் புதிய கொரோனா மாறுபாடு பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
ஒமைக்ரானை கவலைக்குரிய மாறுபாடாக அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்துமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
ஒமைக்ரான் பரவலை தடுக்க உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கிறிஸ்மஸ் விடுமுறை நெருங்கி வரும் வருவதால், தடுப்பூசி போடாத மக்களுக்கு இத்தாலி கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் உட்புற உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 2022 ஜனவரி 15ம் திகதி வரை இந்த காட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
உணவகங்கள் அல்லது பார்களில் உணவருந்துபவர்களிடம் ‘சூப்பர் கிரீன் ஹேல்த் பாஸ்’ உள்ளதா என்பதை இத்தாலிய பொலிசார் சரிபார்க்கலாம்.
‘சூப்பர் கிரீன் ஹேல்த் பாஸ்’ என்பது தடுப்பூசி போட்டதற்கான அல்லது சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஆகும்.
மக்களின் ஹெல்த் பாஸ் நிலையை சரிபார்க்கும் ஸ்மார்ட்போன் செயலிகள் புதுப்பிக்கப்படும் மற்றும் சமீபத்திய நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என சோதனையில் உறுதி செய்தவர்கள் இனி இசை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.