தொட்டால் கூறுபோட்டுவிடுவேன்... முதலிரவில் மிரட்டிய மனைவி
மே மாதம் 2ஆம் திகதி, உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு தம்பதிக்கு பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த யாருக்கும் தெரியாத ஒரு விடயம் சில நாட்களாக தம்பதிகளுக்குள் நடந்துகொண்டிருந்தது.
முதலிரவில் மிரட்டிய மனைவி
உத்தரப்பிரதேசத்திலுள்ள Prayagraj நகரில், கேப்டன் நிஷாதுக்கும் (26) சித்தாரா என்னும் பெண்ணுக்கும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
முதலிரவு அறைக்குள் வந்த சித்தாரா, அறையின் ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார். முகத்தை மறைக்கும் முக்காட்டுக்கு அடியில் அவர் ஒரு பெரிய கத்தி வைத்திருந்தார்.
என்னைத் தொட்டால் உன்னை 35 துண்டுகளாக வெட்டுவிடுவேன், என் உடல் அமானுக்குத்தான் சொந்தம் என்று சித்தாரா கூற, அதிர்ச்சி அடைந்தார் நிஷாத்.
मध्य प्रदेश के इंदौर के राजा रघुवंशी केस ने दिल दहला दिया है. शादी के महज कुछ दिन बाद ही सोनम ने राजा की हत्या करवा दी. अब यूपी के प्रयागराज में एक दुल्हन ने सुहागरात पर दूल्हे के साथ कुछ ऐसा किया कि उसे भी राजा रघुवंशी मर्डर केस याद आ गया.
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) June 24, 2025
सुहागरात में दुल्हन ने अपने दूल्हे को… pic.twitter.com/pyYdTgq8eY
பயமும் அவமானமுமாக இதே விடயம் தினமும் தொடர, வரவேற்பு நிகழ்ச்சியிலும், நடந்ததை யாரிடமும் சொல்லவில்லை நிஷாத்.
ஆனால், அதற்குப் பின்பும் தினமும் நள்ளிரவு வரை கையில் கத்தியுடன் சித்தாரா உட்கார்ந்திருக்க, உறங்காமல் உட்கார்ந்திருந்த நிஷாதுக்கு, சமீபத்தில் ராஜா ரகுவன்ஷிக்கு நடந்ததுபோல தனக்கும் நடந்துவிடக்கூடாதே என பயம்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, தன் பெற்றோரிடம் விடயத்தைச் சொல்லியிருக்கிறார் நிஷாத்.
அவர்கள் சித்தாராவிடம் விசாரிக்க, தான் அமான் என்பவரை காதலிப்பதாகவும், தன்னைக் கட்டாயப்படுத்தி தன் பெற்றோர் திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும் சித்தாரா கூறியதுடன், எனக்கு முதலிரவு என்று ஒன்று நடந்தால் அது அமானுடன்தான் என்றும் கூறியிருக்கிறார்.
நிஷாதின் பெற்றோர் விடயத்தை சித்தாராவின் பெற்றோரிடம் கூற, பெரியவர்கள் பலர் கூடி, காதலனை மறந்து நிஷாதுடன் வாழ சித்தாராவை வற்புறுத்தியதுடன், தான் அதற்கு சம்மதிப்பதாக சித்தாராவை எழுதிக்கொடுக்கவும் வைத்துள்ளார்கள்.
ஆனால், மே மாதம் 30ஆம் திகதி வீட்டின் பின்பக்கச் சுவரைத் தாண்டிக் குதித்து தப்பியோடிவிட்டார் சித்தாரா.
நேராக அவர் தன் காதலனான அமான் வீட்டுக்கே சென்றுவிட, மனைவி விட்டுப்போன அவமானத்துடன், பொலிஸ் விசாரணையும் சேர்ந்துகொள்ள, தலைகுனிவுடன் வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளது நிஷாத் குடும்பம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |