e-Aadhaar App: உங்களது சுய விவரங்களை வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் புதுப்பிக்கலாம்
ஆதார் கார்டில் உங்களது சுய விவரங்களை சில நிமிடங்களில் இ-ஆதார் செயலியை பயன்படுத்தி புதுப்பிக்கலாம்.
விரைவில் e-Aadhaar செயலி
UIDAI விரைவில் புதிய e-Aadhaar App-யை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிறந்த திகதியை வீட்டில் இருந்தே நேரடியாகப் புதுப்பிக்க முடியும்.
இந்த செயலியில் முக அடையாளம், AI சரிபார்ப்பு மற்றும் QR-குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் அடையாள அமைப்பு ஆகியவை உள்ளன.
இந்த செயலியின் உதவியுடன், ஆதார் அட்டையை அணுகுவது எளிதாக இருக்கும் எனவும் மோசடி ஆபத்து குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தார் UIDAI இன் தலைமை நிர்வாக அதிகாரி.

* டிஜிட்டல் அல்லது masked ஆதாரை பயன்பாட்டின் மூலம் பகிரலாம், இதனால் நகல்களின் தேவை நீக்கப்படும்.
* OTP-க்கு பதிலாக, உங்கள் முகத்தைப் பயன்படுத்தி செயலியில் உள்நுழைவது வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
இந்த செயல்முறை நவம்பர் 2025 முதல் முற்றிலும் டிஜிட்டல் ஆகிவிடும். அதன்பிறகு பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு (கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்) மட்டுமே நீங்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        