இஸ்ரேல் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை முகம்... அம்பலப்படுத்திய இணைய மக்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை முகத்தை உலகெங்கிலும் உள்ள இணைய மக்கள் அம்பலப்படுத்தியுள்ளதுடன், ஏன் இந்த கபட நாடகம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக
ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தொடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக, காஸா பகுதி மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. கடந்த ஒருவார காலத்தில் மட்டும் 2,200 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
EU President Ursula von der Leyen defined Russia’s “targeted attacks” on Ukrainian civilians as “pure terror” during her speech in 2022.
— TRT World (@trtworld) October 12, 2023
A year later, she has yet to release a statement on Israel’s recent targeted attacks and heavy bombardment on Gaza, where at least 1,200… pic.twitter.com/OMFgQsdV8F
இதில் பலியான சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 700 கடந்துள்ளதாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், காஸா பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் வீசியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்றே இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், 40 பிஞ்சு குழந்தைகளை ஹமாஸ் படுகொலை செய்து உடல்களை எரித்துள்ளதாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு, உலக நாடுகளை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக திருப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால். ஹமாஸ் தரப்பு முற்றாக மறுத்த நிலையிலும், இதுவரை உறுதியான ஆதாரங்களை இஸ்ரேல் தரப்பு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவில்லை. மேலும், ஹமாஸ் படையினருக்கு பதிலடி அளிக்கும் வகையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குண்டு வீசுவதுடன், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் காஸா பகுதி மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இரட்டை முகம்
இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பேசிய காணொளி ஒன்று தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
@epa
அதில், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி, குறிப்பாக மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் மீது தாக்குதல் நடத்துவது போர் குற்றமாகும் என தெரிவித்துள்ளார். மேலும், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவையை தடை செய்வது உண்மையில் பயங்கரவாத செயல் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இஸ்ரேல் விவகாரத்தில் உர்சுலா வான் டெர் லேயன் நேரிடையாக சென்று ஆதரவு தெரிவித்துள்ளதை இணைய மக்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை முகம் வெளிப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
@getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |