ட்ரம்ப் கைவிட்டதால் நாடொன்றில் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ள அகதி மாணவிகள்
அமெரிக்க அரசு வழங்கி வந்த நிதி உதவிகளை ட்ரம்ப் நிறுத்தியதால், பழைய காலம் போன்று மாதவிடாய் காலங்களில் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை நாடொன்றில் மாணவிகளுக்கு உருவாகியுள்ளது.
பழமைக்குத் திரும்பும் மாணவிகள்
வட கென்யாவிலுள்ள கக்குமா (Kakuma) என்னுமிடத்தில், உலகின் மிகப்பெரிய அகதிகளில் முகாம்கள் ஒன்றான கக்குமா அகதிகள் முகாம் அமைந்துள்ளது.
இந்த அகதிகள் முகாமுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவியை, ட்ரம்ப் நிர்வாகம் நிறுத்திவிட்டது.
ஆகவே, அந்த அகதிகள் முகாமிலுள்ள மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே பல ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், மாணவிகள் தர்மசங்கடமான ஒரு நிலையை அனுபவித்துவருகிறார்கள்.
ஆம், முன்பு, மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்துவதற்காக சானிட்டரி நாப்கின்கள் பள்ளிகளால் இலவசமாக வழங்கப்பட்டுவந்தன. இப்போது அவசரத் தேவைகள் ஏற்பட்டால் மட்டுமே அவை வழங்கப்படுகின்றன.
ஆகவே, பழைய காலங்கள் போல பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கு வராமல் தங்கள் அறைகளிலேயே முடங்கிக் கிடக்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார்கள்.
ஆக, ட்ரம்ப் நிர்வாகம் தனது நிதி உதவியை நிறுத்தியதால், மாணவ மாணவியர் அடிப்படைத் தேவைகளுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இப்படியே தொடர்ந்தால், இந்த நிலை மேலும் மோசமாகும் என்கிறார்கள் அங்கு பணிபுரிவோர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |